"பாராளுமன்றத்தில் அதிக முறை பேசாததேன்?'
வாக்களித்த பஞ்சாப் மக்கள் தங்களது ஆம் ஆத்மி எம்பி பகத்சிங் மான்யிடம் கேள்வி.

கேள்விகள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படுகிறது என கூறி பாராளுமன்றத்தில் குலுக்கல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை தனது மொபைல் போனில் படமெடுத்து தொகுதி மக்களுக்கு முக நூல் மூலம் வீடியோ வெளியிட்டார்....
இதை தொடர்ந்து சபை உரிமை மீறல் என பிரச்சனையை எழுப்பி பாராளுமன்றத்தினை முடக்கினார்கள் பிஜேபி கட்சியினரும்...காங்கிரஸ் கட்சியினரும்...
பிரச்சனையை வளர்க்காமல் மன்னிப்பு கோரியுள்ளார் அந்த ஆம் ஆத்மி எம்பி பகவத்சிங் மான் அவர்கள்.....ஆனால் மன்னிப்பு கோரினால் மட்டும் போதாது என்றும்..அவர் சிறையிலடைக்கப்பட வேண்டும் என்றும் கோரிவருகிறார்கள்...
மக்கள் மன்றங்களில் அமர்ந்துகொண்டு மொபைலில் ஆபாச படங்கள் பார்த்த பிரதிநிதிகளை பார்த்திருக்கிறோம்....
பாராளுமன்றத்தில் சுகமாக தூங்கும் தலைவர்களை பார்த்திருக்கிறோம்...அவர்கள் மீதெல்லாம் இதுபோன்ற உரிமை மீறல்கள் வந்ததில்லை...ஒரு வேளை ,தூங்குவது... மொபைலில் ஆபாச படங்கள் பார்ப்பது போன்றவை உரிமைகளாக இருக்குமோ?