0 மக்களை ஏமாற்றுகிறதா மோடி விளம்பரம்?

திடீரென்று நல்லிரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என இந்திய பிரதமர் மோடி அவர்கள் அறிவித்திருக்கிறார். இதனால் பெருமளவில் பீதியடைந்து மக்கள் ஏ.டி.எம் மையங்களில் குவிகின்றனர். என்பதிலிந்தே புரிந்துகொள்ள முடிகிறது.

ஆப் கா மோடிஜீ டூயிங் குட் டிராமா...

யோசிக்கத் தெரியாத சாதாரண மக்களிடம் தங்கள் வலிமையை காட்டிகொள்ளும் வகையில்  வெகு அற்புதமான ஸ்டண்ட் ஆக்டிங் மட்டுமே இந்த வரலாற்று நிகழ்வு..

உண்மையில் கருப்பு பணத்தையும், பினாமி கலாச்சாரத்தையும் இது பெரிய அளவில் பாதிக்கப்போவதில்லை.

டாலராகவும், கோல்டாகவும், லேண்டாகவும் பதுக்கிய கருப்பு பணத்தை மீட்கமுடியாது என்பதை நன்கு தெரிந்தும், மக்களிடம் போலி ஸ்டண்ட் விளம்பரத்தை மோடி அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது.

போலி கள்ளநோட்டுகளை ஒழிக்க சிறிதளவு பயன்படும் என்று கூப்பாடு போடும் சொம்புகளே  அடிதட்டு மக்களின் வயிற்றில் அடித்தா இப்படி உங்கள் கேவலமான விளம்பரத்தை தேட வேண்டும்??

போதிய அவகாசமும், அறிவிப்பும் கொடுத்து முறையாக அறிவித்தாலும் கூட கள்ளநோட்டுகளை தடுக்கலாமே??!

ஏன் இப்படி சாதாரண குடிமக்களை மதிக்காமல் உங்கள் சர்வதிகாரத்தை காட்டுகிறீர்கள்??

விவரம் தெரிந்தவர்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள் இது மக்களுக்கு பயன்படாத ஒரு சுய விளம்பரயுக்தி மட்டுமே...

மங்காத்தா கிளைமேக்சில் பெயரளவிற்கு கொஞ்சூண்டு பணத்தை எரிச்சுட்டு மீதிய ஆட்டய போடுவாங்களே...?  அதுபோலவே கருப்பு பணத்தை மீட்பதில் தோல்வி கண்ட மோடி அரசு தங்களின் மேல் மாயையை உண்டாக்கவே இவ்வாறான சர்வதிகாரபோக்கை காட்டியிருக்கிறது.

உண்மையில் மக்கள் நலன் பற்றி விரும்பியிருந்தால் பீதியடையாத வண்ணம், போதுமான முன் அறிவிப்பை வழங்கி அதிகளவில் பணமாற்று மையங்களை தற்காளிகமாகவேனும் ஏற்படுத்தி நீண்ட வரிசையில் அவதிக்குள்ளாகாமல், மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்காமல் இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும்.

தொற்று எங்கேயோ அங்கே தான் கத்தி வைக்கனும் தல..

உண்மையில் கருப்பு பணம் யாரிடம் இருக்கும்? ரியல் எஸ்டேட், அரசியல், கார்ப்பரேட், பண முதலைகள் தங்களின் கருப்பு பணத்தை 1000, 500 ரூபாய் நோட்டுகளாக கிணற்றிலும், சுவற்றிலும், மொட்டை மாடியிலும் தேமே என்று ஒளித்து வைத்திருப்பார்கள் என்று நம்புகிறீர்களா??

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் தோழர்களே!!! இந்த பண மாற்று விவகாரம்  வெற்றியா தோல்வியா என்பதை வரும் எதிகாலம் மட்டுமே தெரிவிக்கும். தேமே என்றிருப்பதற்கு பதில் ஏதேனும் செய்துவிடுவது நல்லது தான். ஆனால், அவ்வாறு செய்யும் நடவடிக்கைகள் சாமானிய நடுத்தரவர்க்கத்தை கொஞ்சமும் மதிக்காதவாறு செய்துகொண்டு அதிலும் தங்களின் மட்டமான அரசியல் விளம்பரத்தை தேடும் அரசின் போக்கானது, நாளைய நாட்களில் "தங்களின் காவிமயமான சர்வதிகார  இந்தியாவை உருவாக்குவதற்கான சோதனை முன்னோட்டங்களோ? என்ற பயம்" சாமானிய மக்களிடம் உருவாக்குறது என்பதை மறுப்பதற்கு இல்லை.




ஆறேழு வருடங்களுக்கு முன்னால் சாதரணமாக 800 ரூபாய்க்கு ஒரு அயர்ன்பாக்ஸ் வாங்குறதுனா கூட கடைக்காரன் கடன் தரமாட்டான். ஆனால் இன்னைக்கு 45000 ரூபாய்க்கு ஒரு மரகட்டிலை ஐந்து நிமிடத்தில் சிபில் ஸ்கோர் செக் பன்னி லோன் சேங்சன் பன்னிகொடுத்துடறாங்க... இதில் உண்மையில் என்ன நடக்கிறது???

தேவையை மீறி கடனில் முழ்கும் மிகைநுகர்வு கலாச்சார நிலமையை இது உண்டாக்கும். 1.50 வட்டி என்பது பேங்கிற்கு பெரும் பலனை உண்டாக்குகிறது. ரிலைன்ஸ் போன்ற கார்ப்ரேட்கள் வெகு வேகமாக பைனான்ஸ் நிறுவனங்களை நிறுவி வருகிறது என்பதை காணமுடிகிறதல்லவா??

மாதம் தவறாமல் டியூ கட்டியே ஆகவேண்டும். இதனால் தங்களின் பணம் பெருக்கப்படுகிறது என்பதாலேயே வங்கிகள், தனியார் நிறுவனங்கள் கூவி கூவி லோன் கொடுத்துக்கொண்டிதுக்கின்றன. இதில் அதிகமாக சிக்கி சீரழிபவர்கள் நடுத்தரவர்க்கமே..!

ஆக, பேங்கிங் மின்னனு பறிமாற்றங்களில் என ஆயிரம் ரூபாய் டெபாசிட் பன்னவோ, எடுக்கவோ முயன்றாலும் 20 ரூபாயாவது சர்வீஸ் சார்ச் கொடுத்து ஏமாற்றப்பட்டு சீரளிந்துகொண்டிருக்கிறோம். இதில் பெரும் பணமுதலைகளுக்கு லாபத்தை தவிர பாதகம் எதுவுமில்லை. ஆனால் நமக்கு???

இன்னும் 8 வருடங்களில் பெரும் பொருளாதார சீர்கேட்டை நாம் சந்திக்க இருக்கிறோமோ என்ற பயம் சூழ்கிறது. மக்களும் அதிகாரிகளும் யோசித்து செயல்படுவது நல்லது.